ஒத்தக்கடை அருகே 2 இளைஞர்கள் கொலை :

ஒத்தக்கடை அருகே 2 இளைஞர்கள் கொலை :
Updated on
1 min read

மதுரை ஒத்தக்கடை அருகே திண்டியூர் கண்மாய்க் கரையில் நேற்று மாலை 2 இளைஞர்கள் மயங்கிக் கிடப்பதாக ஒத்தக்கடை போலீஸாருக்கு தகவல் கிடைத் தது. ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவன் நேரில் சென்று விசாரித்தார். அப்போது 2 பேரும் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதில் ஒருவர் மதிச்சியத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி(25) என்பதும், மற்றொருவர் அவரது நண்பர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது. பழிக்குப் பழியாக இக்கொலை நடந்ததா? என விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in