1,000 ஏக்கரில் பயிர்கள் சேதம்; நிவாரணம் வழங்கக் கோரி மனு :

1,000 ஏக்கரில் பயிர்கள் சேதம்; நிவாரணம் வழங்கக் கோரி மனு :
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியப் பகுதியில் பத்தாளப்பேட்டை, கிளியூர், நடராஜபுரம், வேங்கூர் ஆகிய கிராமங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் இரா.நடராஜன் தலைமையில், நிர்வாகிகள் த.சங்கிலிமுத்து, ம.முருகேசன், மகேந்திரன், சாமி முருகேசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

பின்னர், இதுதொடர்பாக திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அவர்கள் அளித்த கோரிக்கை மனுவில், “திருவெறும்பூர் ஒன்றியப் பகுதிகளில் ஏறத்தாழ 1,000 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in