வாலாஜாபாத் தரைப்பாலம் மூடப்பட்டது :

வாலாஜாபாத் தரைப்பாலம் மூடப்பட்டது :
Updated on
1 min read

தமிழக, ஆந்திர எல்லையோர பகுதிகளில் பெய்த கன மழையால், நீர்த்தேக்கங்களில் இருந்து பாலாற்றில் திறந்து விடப்பட்டுள்ள உபரிநீர் ராணிப்பேட்டை வழியாக காஞ்சிபுரம் பாலாற்றுக்கு வந்தது. இதனால் வாலாஜாபாத்-அவளூர் சாலையில் உள்ள தரைப்பாலத்துக்கு மேலே நீர் சென்றது.

இதனால் அவளூர், அங்கம்பாக்கம், கன்னடியன் குடிசை, கம்மராஜபுரம், தம்மனூர், வள்ளிமேடு, இளையனார் வேலூர், காவந்தண்டலம் என 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்தப் பகுதி மக்கள் பல கிலோ மீட்டர் சுற்றிக் கொண்டு தங்கள் பகுதிக்குச் செல்ல வேண்டி இருந்தது.இதனால், பாலம் வழியாக செல்ல அனுமதிக்கக் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in