சித்தியை கொலை செய்த தொழிலாளி நண்பருடன் கைது :

சித்தியை கொலை செய்த தொழிலாளி நண்பருடன் கைது :
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை அருகே கெழுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவ மூர்த்தி மனைவி நாகம்மாள்(60). கணவர் இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வந்த நாகம் மாள், தனது விவசாய நிலத்தில் பயிர் சாகுபடி செய்து வந்தார்.

இவர் கடந்த 9-ம் தேதி தனது வீட்டில் கழுத்து நெரிக்கப்பட்டு, சடலமாக கிடந்தார்.

இதுகுறித்து பெருகவாழ்ந் தான் போலீஸார் நடத்திய விசார ணையில், தென்கோவனூரைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான நாகம்மாளின் அக்காள் மகன் ராஜ்குமார்(39), தனது சித்தி நாகம்மாளின் வீட்டுக்கு வந்து, நாகம்மாளுக்கு வந்த பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை தருமாறு கேட்டுள்ளார்.

ஆனால், பணத்தைக் கொடுக்க நாகம்மாள் மறுத்ததால், தனது நண்பர் மருது பாண்டியன்(38) என்பவருடன் சேர்ந்து, நாகம்மாளை கொலை செய்தது தெரியவந்தது. இதை யடுத்து, அவர்கள் இருவரை யும் நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in