காமராஜ் பள்ளியில் புதிய கலையரங்கம் :

காமராஜ் பள்ளியில் புதிய கலையரங்கம்  :
Updated on
1 min read

தூத்துக்குடி அருகேயுள்ள மாப்பிளையூரணி காமராஜ் மெட்ரிக் பள்ளியில் ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கலையரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.

மாப்பிளையூரணியில் சிவகாசி நாடார் உறவின்முறை சார்பில் காமராஜ் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சமூக சுழல்நிதி திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் துணைப் பொதுமேலாளர் ஜெ.சுந்தரேஷ் குமார் கலையரங்கத்தை திறந்து வைத்தார். சிவகாசி நாடார் உறவின்முறை தலைவர் தினகரன், செயலாளர் தங்கராஜ், பொருளாளர் நரேன் தர்மராஜ் மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in