திருக்கோவிலூர் அருகே - பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை :

திருக்கோவிலூர் அருகே -  பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை :
Updated on
1 min read

திருக்கோவிலூர் அருகே பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

திருக்கோவிலூர் அருகே கல்லந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் என்கிற சுப்பிரமணி(52). இவர் பெங்களூரில் வேலை செய்தபோது, பெங்களூர் சாம்ராஜ் பேட்டையைச் சேந்த அருண் என்பவர் மனைவி ஸ்வேதா(36) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை சுபாஷ் தன் சொந்த ஊரான கல்லந்தல் கிராமத்திற்கு அழைத்து வந்து குடி வைத்துள்ளார். கடந்த 10.1.2020-ல் சுபாஷ் குடிபோதையில் ஸ்வேதாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.அப்போது சுபாஷ் கட்டையால் தாக்கியதில் ஸ்வேதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சுபாஷை கைது செய்தனர்.

இவ்வழக்கு விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் நீதிபதி சாந்தி நேற்று சுபாஷுக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in