இலக்கை நோக்கி பயணித்தால் சாதிக்கலாம் : உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.மதி பேச்சு

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை புதிய நீதிபதிகள் எஸ்.மதி, விஜயகுமார் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கப்படுகிறது.
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை புதிய நீதிபதிகள் எஸ்.மதி, விஜயகுமார் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கப்படுகிறது.
Updated on
1 min read

இலக்கை நிர்ணயித்து அதை நோக்கிப் பயணித்தால் சாதிக்கலாம் என உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.மதி பேசினார்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பார் அசோசியேஷன் சார்பில் புதிய நீதிபதிகள் எஸ்.மதி, ஆர்.விஜயகுமார் ஆகியோருக்கு பாராட்டு விழா நடந்தது.

பார் அசோசியேஷன் தலைவர் என்.கிருஷ்ணவேனி வரவேற்றார். கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் வீராகதிரவன், ஆர்.பாஸ்கரன், மூத்த வழக்கறிஞர் ஐசக்மோகன்லால், வழக்கறிஞர் எஸ்.சீனிவாசராகவன் ஆகியோர் புதிய நீதிபதிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தனர்.

நீதிபதி எஸ்.மதி பேசுகையில், நான் மண்ணின் மகள். மதுரைக்கு என்னால் முடிந்ததைச் செய்வேன். மண்ணின் பெருமையைக் கண்டிப்பாக காப்பாற்றுவேன். என்னுடன் பழகியவர்கள் அனைவரும் என்னை ஊக்கப்படுத்தினர். ஓர் இலக்கு நிர்ணயித்து அதை நோக்கிப் பயணப்பட்டால் கண்டிப்பாக சாதிக்க முடியும். அவ்வாறு செயல்பட்டால் உயர் நீதிமன்ற மதுரை கிளையிலிருந்து பெண் வழக்கறிஞர்கள் அதிகளவில் நீதிபதி களாக வருவதற்கு வாய்ப்புள்ளது, என்றார்.

நிகழ்ச்சியில் நீதிபதி எஸ்.வைத்திய நாதன் மற்றும் வழக்கறிஞர்கள் பங் கேற்றனர். பார் அசோசியேஷன் பொதுச் செயலர் என்.இளங்கோ நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in