சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிலரங்கு :

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிலரங்கு :
Updated on
1 min read

தேசிய பசுமைப்படை திருநெல்வேலி கல்வி மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப் பாளர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிலரங்கு, பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவைன்சன் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.கே.சி. சுபாஷினி தலைமை வகித்தார். கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் செல்வின் சாமுவேல் முன்னிலை வகித்தார். சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் எஸ். கணேசன் வரவேற்றார்.

கோட்டாட்சியர் ரா. சந்திரசேகர், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ், மின்வாரிய செயற்பொறியாளர் பேச்சிமுத்து, வட்டாட்சியர் செல்வன், களஆய்வாளர் மதிவாணன் ஆகியோர் பேசினர். பள்ளி தாளாளர் ஆர்.கே. ஜேக்கப், முதல்வர் டி. ஜான்சன், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் கோ. கணபதிசுப்பிரமணியன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in