சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோருக்கு - கடன் வழங்க 3 இடங்களில் வரும் 22-ம் தேதி சிறப்பு முகாம் :

சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோருக்கு  -  கடன் வழங்க 3 இடங்களில் வரும் 22-ம் தேதி சிறப்பு முகாம் :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கல்விக் கடன், தனிநபர் கடன், சுய உதவிக் குழுக்கான கடன், கறவைமாடு கடன், ஆட்டோ கடன் ஆகியவை வழங்கும் சிறப்பு முகாம்கள் மூன்று இடங்களில் நடத்தப்பட உள்ளது.

வரும் 22-ம் தேதி தூத்துக்குடி எட்டயபுரம் சாலை போல்பேட்டையில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வைத்தும், 23-ம் தேதி திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் வைத்தும், 24-ம் தேதி கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வைத்தும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த வாய்ப்பை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இன மக்கள் பயன்படுத்தி பொருளாதார மேம்பாடு அடைந்திடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in