முன்னாள் அமைச்சர் முன் ஜாமீன் மனு ஒத்திவைப்பு :

முன்னாள் அமைச்சர் முன் ஜாமீன் மனு ஒத்திவைப்பு :
Updated on
1 min read

மோசடி புகாரில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் சரோஜாவின் முன் ஜாமீன் மனு வரும் 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நாமக்கல் நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது.

ராசிபுரம் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க மேலாளர் குணசீலன் (65). இவர் முன்னாள் அமைச்சர் சரோஜாவிடம் உதவி யாளராக இருந்தார். இந்நிலையில் இவர் முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் ஆகியோர் ரூ.76.50 லட்சம் மோசடி செய்ததாக ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் லோகரஞ்சன் ஆகியோர் முன் ஜாமீன் கேட்டு நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி குண சேகரன் உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in