கை, கால்களை கட்டிக் கொண்டு விவசாயிகள் போராட்டம் :

கை, கால்களை கட்டிக் கொண்டு விவசாயிகள் போராட்டம் :
Updated on
1 min read

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு இருமடங்கு லாபம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள சங்க அலுவலகத்தின் முன் அக்.12-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

30-வது நாளான நேற்று அவர்கள் தங்களது கை, கால்களை கட்டிக் கொண்டு எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த போராட்டத்துக்கு சங்கத் தலைவர் பி. அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in