லாட்டரி, கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது :

லாட்டரி, கஞ்சா விற்பனை செய்த  2 பேர் கைது :
Updated on
1 min read

திருச்சி பாலக்கரை பகுதியில் லாட்டரி, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பாலக்கரை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீஸார் நேற்று அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த இளையராஜா(40) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 3.250 கிலோ கஞ்சா மற்றும் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல கெம்ஸ்டவுன் பகுதியில் செபஸ்தியார் கோயில் தெருவைச் சேர்ந்த குணசேகரன் (51) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்தும் 3.250 கிலோ கஞ்சா மற்றும் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in