சோழவந்தான் அருகே - ரவுடி கொலையில் 4 பேர் கைது :

சோழவந்தான் அருகே -  ரவுடி கொலையில் 4 பேர் கைது :
Updated on
1 min read

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ரவுடி கொல்லப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சோழவந்தான் அருகேயுள்ள கரட்டுப் பட்டியைச் சேர்ந்தவர் ரோஷன்குமார் (21) . ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டு உடலில் கல்லைக் கட்டி கிணற்றில் வீசப் பட்டார். போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

எஸ்பி. வீ.பாஸ்கரன் உத்தரவின் பேரில், கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடு பட்டனர்.

இந்தக் கொலையில் கரட்டுப்பட்டியைச் சேர்ந்த சுபாஷ் (22), ஜெயசூர்யா (21), நாச்சிகுளம் பூவேந்திரன் (22), சிவா (23) ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய் தனர். கைதான 4 பேரும் ரோஷன்குமாரின் கூட்டாளிகள் என்றும் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்..

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in