ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் கைது :

ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் கைது :
Updated on
1 min read

தி.மலை அடுத்த கலஸ்தம் பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் காண்டீபன்(51). இவருக்கு, சென்னை அடுத்த வண்டலூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் அவரது மனைவி சுலோச்சனா ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். இவர்கள் காண்டீபனை தொடர்பு கொண்டு, அவரது மகளுக்கு விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி உள்ளனர். இதற்காக, அவர்களது வங்கி கணக்கில் ரூ.10 லட்சம் செலுத்தியுள்ளார். ஆனால், விமான நிலையத்தில் வேலை வாங்கி தரவில்லை. இது குறித்து காண்டீபன் கொடுத்த புகாரின் பேரில் தி.மலை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in