மேலூர் அருகே - பைக் மீது கார் மோதல் திருச்சி காவலர் உயிரிழப்பு :

சந்திர சுபாஷ்
சந்திர சுபாஷ்
Updated on
1 min read

நெல்லை மாவட்டம், பனங்குடி தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் மகாராஜா. இவரது மகன் சந்திர சுபாஷ் (25). இவர் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்தார். முக்கிய பிரமுகர் ஒருவருக்கு மெய்க்காவலராக பணிபுரிந்தார். இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்றிருந்த அவர், தளவாய்புரத்தில் இருந்து பைக்கில் நேற்று திருச்சிக்குச் சென்றார். மேலூர் அருகில் சத்தியபுரம் சந்திப்பில் சென்றபோது, திருச்சியில் இருந்து மதுரை நோக்கி வந்த லாரி அவர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in