வீரமலைப்பாளையத்தில் நாளை முதல் நவ. 16 வரை துப்பாக்கிச் சுடும் பயிற்சி :

வீரமலைப்பாளையத்தில் நாளை முதல் நவ. 16 வரை துப்பாக்கிச் சுடும் பயிற்சி :
Updated on
1 min read

திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் அணி யாப்பூர் கிராமம் வீரமலைப் பாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. இங்கு நவ.10-ம் தேதி(நாளை) முதல் 16-ம் தேதி வரை காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 10 மணி வரையிலும் இந்திய ராணுவத்தின் காலாட்படை வீரர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

எனவே, இந்த பயிற்சி தளத்தில் மனித நடமாட்டம் இருக்கக் கூடாது, கால்நடை களை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in