குட்கா வைத்திருந்த அதிமுக கவுன்சிலரின் கணவர் கைது :

குட்கா வைத்திருந்த அதிமுக கவுன்சிலரின் கணவர் கைது :
Updated on
1 min read

கரூரில் பேக்கரி கடையில் குட்கா வைத்திருந்த அதிமுக மாவட்ட ஊராட்சி உறுப்பினரின் கணவர் கைது செய்யப்பட்டார்.

கரூர் அருகேயுள்ள மண்மங் கலம் காந்தி நகரை சேர்ந்தவர் மனோகரன்(46). இவர் மண்மங்கலம் செம்மடை பகுதி யில் பேக்கரி வைத்துள்ளார். அதிமுக முன்னாள் ஊராட்சி கிளைச் செயலாளர். இவரது மனைவி அலர்மேலு. அதிமுக வைச் சேர்ந்த இவர் தற்போது மாவட்ட ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில் மனோகரன் பேக்கரியில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் மதுரைவீரன் தலைமை யிலான அலுவலர்கள் நேற்று நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்ப னைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகா ரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் வாங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மனோகரனை கைது செய்து விசாரித்து வரு கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in