டிஎம்பி வங்கி நூற்றாண்டு விழா நடைபயணம் :

தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் விழிப்புணர்வு நடைபயணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் விழிப்புணர்வு நடைபயணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
Updated on
1 min read

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நேற்று விழிப்புணர்வு நடை பயணம் நடைபெற்றது.

தூத்துக்குடி ரோச் பூங்காவில் நடைபயணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக் குமார் தொடங்கி வைத்தார். முக்கிய சாலைகள் வழியாக காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபயணம் நிறைவடைந்தது.

வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே.வி.ராமமூர்த்தி, துணைத் தலைவர், பொது மேலாளர்கள், தலைமை நிதி அதிகாரி, துணைப் பொதுமேலாளர்கள், உதவி பொதுமேலாளர்கள் மற்றும் ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் என, சுமார் 1,000பேர் கலந்து கொண்டனர். இதேபோல் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் திருநெல்வேலி, கோவில்பட்டி, திருச்சி, மதுரை, சென்னை, சேலம், கோவை, திருவனந்தபுரம், பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், மும்பை என 12 மண்டலங்களிலும் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது என, வங்கியின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in