குளத்தில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு :

குளத்தில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு :
Updated on
1 min read

கறம்பக்குடி அருகே நேற்று குளத்தில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே முள்ளங் குறிச்சி ஊராட்சி கோட்டைக்காடு ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் கண்ணன்(20). தங்கையா மகன் அசோக்(20). டிப்ளமோ இன்ஜினீயரிங் படித்துள்ள இவர்கள் இருவரும், கோட்டைக் காட்டில் உள்ள நீர்பள்ளம் எனும் குளத்தில் நேற்று குளித்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

தகவலறிந்து வந்த கறம்பக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் குளத்தில் இறங்கி தேடி கண்ணன், அசோக் ஆகியோரது சடலங் களை மீட்டனர். கறம்பக்குடி வட்டாட்சியர் விஸ்வநாதன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.

இதுகுறித்து வடகாடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in