வீட்டின் பூட்டை உடைத்து 138 பவுன் நகைகள் திருட்டு :

வீட்டின் பூட்டை உடைத்து 138 பவுன் நகைகள் திருட்டு :
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள பெரகம்பியைச் சேர்ந்தவர் அன்பழகன். வெளிநாட் டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லதா.

இவர் கடந்த 2-ம் தேதி சென்னையிலுள்ள மகள் வீட்டுக் குச் சென்றுவிட்டு நேற்றிரவு மீண்டும் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக் குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 138 பவுன் நகைகள், 8 கிலோ வெள்ளி, ரூ.50 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து லதா சிறுகனூர் போலீஸாருக்கு தகவல் கொடுத் தார். அதன்பேரில், போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

இந்த திருட்டுச் சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in