தி.மலையில் உள்ள 4 மையங்களில் - உள்ளூர் பக்தர்களுக்கு : நேரடி அனுமதி சீட்டு :

திருவண்ணாமலை இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் அலுவலகத்தில் நேரடி அனுமதி சீட்டு பெற வரிசையில் காத்திருந்த உள்ளூர் பக்தர்கள்.
திருவண்ணாமலை இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் அலுவலகத்தில் நேரடி அனுமதி சீட்டு பெற வரிசையில் காத்திருந்த உள்ளூர் பக்தர்கள்.
Updated on
1 min read

திருவண்ணாமலையில் உள்ளூர் பக்தர்களுக்கு 4 மையங்களில் நேரடி அனுமதி சீட்டு வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று தொடங்கியது. இதையடுத்து, நேற்று (7-ம் தேதி) முதல் 17-ம் தேதி பிற்பகல் 1 மணி வரை மற்றும் 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்ய விரும்பும் வெளியூர் பக்தர்கள், ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும்.

மேலும், தி.மலை மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் பக்தர்கள், நேரடியாக வழங்கப்படும் அனுமதி சீட்டை பெற்றிருக்க வேண்டும்.

இதற்காக, தி.மலை ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் நேரடி அனுமதி சீட்டு வழங்கும் பணி நேற்று தொடங்கியது. ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து நேரடி அனுமதி சீட்டை பக்தர்கள் பெற்று சென்றனர். நேரடி அனுமதி சீட்டு வழங்கும் பணி இன்றுடன்(8-ம் தேதி) நிறைவடைகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in