சேலம் அருகே குடிசையில் தீ விபத்து : முதியவர் உயிரிழப்பு; மகன் படுகாயம் :

சேலம் அருகே குடிசையில் தீ விபத்து : முதியவர் உயிரிழப்பு; மகன் படுகாயம் :

Published on

சேலம் அருகே குடிசை தீப்பிடித்ததில் முதியவர் உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற மகன் காயம் அடைந்தார்.

சேலம் இரும்பாலை அடுத்த ஆரியகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் பச்சமுத்து (95).இவர் குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.இவரின் வீட்டு அருகே அவரது மகன் வனச்செழியன் (51) வசித்து வந்தார். இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் பச்சமுத்தின் குடிசை வீட்டில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது பச்சமுத்து குடிசையின் உள்ளே இருந்தார். இதையறிந்த வனச்செழியன் குடிசைக்குள் இருந்த தந்தையை மீட்டு வந்தார். இதில், இருவரும் பலத்த தீக்காயம் அடைந்தனர். இருவரையும் அக்கம் பக்கத்தினர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில், பச்சமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வனச்செழியன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக இரும்பாலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in