பாம்பனில் யு.அருளானந்தம் நூல் வெளியீடு :

பாம்பனில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.
பாம்பனில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.
Updated on
1 min read

இந்நிலையில் மக்கள் கண்காணிப்பகம் மற்றும் மீனவர் உரிமைக் கூட்டமைப்பு இணைந்து தொகுத்த நெய்தல் நிலத்தின் பெருந்தலைவர் தீவுக்கவி யு.அருளானந்தம் என்ற நூல் பாம்பனில் வெளியிடப்பட்டது.

மக்கள் கண்காணிப்பகம் தலைவர் ஹென்றி திபேன், தேசிய மீனவர் பேரவைத் தலைவர் இளங்கோ, அகில இந்திய மீனவர் சங்கத் தலைவர் ஆன்றன் கோமஸ் ஆகியோர் வெளியிட அருளானந்தத்தின் சகோதரர் யு.இருதையம் நூலை பெற்றுக் கொண்டார்.

முன்னதாக, மறைந்த அருளானந்தத்தின் உருவப்படத்துக்கு தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில மீனவர் சங்கத் தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மீனவர் சங்கத் தலைவர்கள் சேசுராஜ், எஸ்.பி.ராயப்பன், ஜெரோம், பாம்பன் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பேட்ரிக், எழுத்தாளர் குறும்பனை பெர்லின் உள்ளிட்டோர் அருளானந்தத்துக்கு புகழ் அஞ்சலி செலுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in