காய்கறி சந்தை அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்த டெல்லி சிறப்பு பிரதிநிதி :

காய்கறி சந்தை அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்த டெல்லி சிறப்பு பிரதிநிதி :
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலைய வளாகத்தில் காய்கறி சந்தை அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அவருடன், ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன், நாகை எம்.பி எம்.செல்வராஜ், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க.மாரிமுத்து ஆகியோரும் சென்றனர்.

ஆய்வுக்குப் பின்னர், ஏ.கே.எஸ்.விஜயன் தெரிவித்தது:

திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் காய்கறி சந்தை அமைப்பதற்கான இடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக, முத்துப்பேட்டை அரசு விருந்தினர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஏ.கே.எஸ்.விஜயன் பங்கேற்று, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்றுக்கொண்டார்.

நிகழ்வில், கோட்டாட்சியர் அழகர்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in