சேலத்தில் நடந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு :

சேலத்தில் நடந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு :
Updated on
1 min read

சேலத்தில் நேற்று முன் தினம் (4-ம் தேதி) நடந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம், கரூப்பூர் அருகே உள்ள மூங்கில்பாடிகொல்லப்பட்டியைச் சேர்ந்தவர் கபின் (22). இவரது தாய் சுமதிக்கு உடல் நலம் பாதித்த நிலையில், நண்பரின் இருசக்கர வாகனத்தில் தாயை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு கபின் சென்றார். தேக்கம்பட்டி பகுதியில் சென்றபோது, எதிரே சந்தோஷ் (19) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். இந்த இரண்டு வாகனங்களும் ஒன்றோடு ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியதில், கபின், சுமதி, சந்தோஷ் மூவரும் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.

அருகில் இருந்தவர்கள் இவர்களை மீட்டு, மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில், கபின் உயிரிழந்தார். சுமதி, சந்தோஷ் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து கருப்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* சேலம் பழைய பள்ளப்பட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளி கணேஷ். இவரது மகன் சூர்யா (25). இவரும் மூட்டை தூக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் (4-ம் தேதி) இரவு வீட்டின் அருகே சூர்யா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் சூர்யா மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றது. இதில் சூர்யா பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து, சூர்யாவை இடித்துவிட்டு நிற்காமல் சென்ற இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவரை தேடி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, விபத்து நடத்திய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in