மேலூர், உசிலம்பட்டியில் விபத்து - தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற : ஆட்சியரின் தம்பி உட்பட இருவர் உயிரிழப்பு :

மேலூர், உசிலம்பட்டியில் விபத்து -  தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற : ஆட்சியரின் தம்பி உட்பட இருவர் உயிரிழப்பு :
Updated on
1 min read

மதுரை கள்ளிக்குடி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் சேரலாதன் (38). இவர் சென்னையில் வழக்கறிஞராக இருந்தார். இவரது சகோதரர் ராஜேந்திரசோழன் கர்நாடக மாநிலத்தில் ஆட்சியராக உள்ளார். இவரது மனைவியும் ஆட்சியராக பணி யாற்றுகிறார்.

தீபாவளி கொண்டாடுவதற்காக சேரலாதன் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு காரில் வந்து கொண்டிருந்தார் காரை கள்ளிக்குடியைச் சேர்ந்த செல்வக் குமார் ஓட்டினார். மேலூர் அருகே திருச்சி-மதுரை நான்குவழிச் சாலையில் கார் வந்தபோது, கூத்தப்பன்பட்டி சந்திப்பு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியன் சுவரில் மோதி எதிர் திசையில் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் காயமடைந்தனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சேரலாதன் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலூர் போலீஸார் விசாரிக் கின்றனர். சேரலாதனுக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகிலுள்ள தெப்பத்துப்பட்டியைச் சேர்ந்தவர் வீராசாமி(45).

இவர் நேற்று முன்தினம் தெப்பத்துப் பட்டி-கரட்டுப்பட்டி ரோட்டில் தனது பைக்கில் சென்றார். கீழ்கலை தோட்டம் அருகே சென்றபோது, எதிரே மற்றொரு பைக்கில் வந்தவர் வீராசாமி பைக் மீது மோதினார். இதில் சம்பவ இடத்திலேயே வீராசாமி உயிரிழந்தார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in