தாக்குதலில் காயமடைந்த இளைஞர் உயிரிழப்பு :

தாக்குதலில் காயமடைந்த இளைஞர் உயிரிழப்பு  :
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மருதபுரத்தைச் சேர்ந்த தங்கபாண்டி என்பவரது மகன் முருகன் (24). இவர், அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் முருகேசன் (28) என்பவருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மது அருந்தியுள்ளார். அப்போது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அரிவாளால் வெட்டப்பட்டதில் காயமடைந்த முருகன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, கொலை வழக்கு பதிவு செய்து, முருகேசனை ஆலங்குளம் போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in