நேரு பிறந்தநாளையொட்டி பேச்சுப் போட்டி : மாணவா்களுக்கு அழைப்பு

நேரு பிறந்தநாளையொட்டி பேச்சுப் போட்டி :   மாணவா்களுக்கு அழைப்பு
Updated on
1 min read

ஜவஹா்லால் நேரு பிறந்தநாளையொட்டி தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக நீலகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் நவம்பா் 14-ம் தேதி ஜவஹா்லால் நேரு பிறந்தநாளையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நவம்பா் 12-ம் தேதி தனித்தனியாக பேச்சுப்போட்டி நடத்த நடைபெறவுள்ளது. வெற்றிபெறுவோருக்கு மாவட்ட அளவில் முதல்பரிசாக தலா ரூ. 5,000, இரண்டாம் பரிசாக தலா ரூ.3,000, மூன்றாம் பரிசாக தலா ரூ. 2,000 வழங்கப்படும். அத்துடன் பள்ளி மாணவா்களுக்கென நடத்தப்படும் போட்டியில் மட்டும் இருவரை தனியாக தோ்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத் தொகையாக தலா ரூ. 2,000 வீதம் வழங்கப்படும். இந்த வாய்ப்பை பள்ளி, கல்லூரி மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in