

உடுமலை காந்திசவுக் பகுதியைச் சேர்ந்தவர் கேசவசர்மா (30). கூலித் தொழிலாளி. இவர் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, போக்சோ சட்டப்பிரிவில் கேசவசர்மாவை கைது செய்தனர்.