கடலில் மூழ்கி ஆந்திர இளைஞர் உயிரிழப்பு :

கடலில் மூழ்கி ஆந்திர இளைஞர் உயிரிழப்பு :
Updated on
1 min read

இவர் நண்பர்களுடன் நேற்று முன்தினம் மாமல்லபுரம் பகுதிக்கு சுற்றுலா வந்தார். அங்கு கடற்கரைக் கோயில் அருகே கடலில் குளித்துள்ளார். அப்போது திடீரென அவர் அலையில் சிக்கி, கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். உடனிருந்த நண்பர்களின் அலறல் சப்தம் கேட்டு வந்த மீனவர்கள் அவரை மீட்டு, கரைக்கு தூக்கி வந்தனர். உடனடியாக அவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாமல்லபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in