சாத்தான்குளம் அருகே மாடு திருடியவர் கைது :

சாத்தான்குளம் அருகே மாடு திருடியவர் கைது :
Updated on
1 min read

சாத்தான்குளம் வைத்திலிங்கபுரத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி மகன் ஞானசுந்தர்(27). இவர் தனது வீட்டில் மாடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 28.10.2021 அன்று வீட்டில் இருந்த மாடு ஒன்று காணாமல்போனது. இதுகுறித்து ஞானசுந்தர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உதவி ஆய்வாளர் அருள் சாம்ராஜ் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டார். இதில், சாத்தான்குளம் அமுதுண்ணகுடி பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்ற பேத்தான்(35) என்பவர் மாட்டை திருடியது தெரியவந்தது. போலீஸார் அவரை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in