வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை திருட்டு : கணியாம்பூண்டி போலீஸார் விசாரணை

வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை திருட்டு :  கணியாம்பூண்டி போலீஸார் விசாரணை
Updated on
1 min read

திருப்பூர் கணியாம்பூண்டி கார்த்திகை அவென்யூ 2-வது வீதியை சேர்ந்தவர் கணேசன் (50). பனியன் தொழிலாளி. இவர், தனது குடும்பத்துடன் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த வாரம் சென்றுள்ளார்.

நேற்றுமுன் தினம் திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளேசென்று பார்த்தபோது, பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த 12 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. கணேசன் அளித்த புகாரின் பேரில் திருமுருகன் பூண்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தபோது, அதில் 2 மர்ம நபர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது, தெரியவந்தது. 2 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in