பெரியாறு அணையை பார்வையிட அமைச்சர் துரைமுருகன் வருகை : அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

அமைச்சர் ஐ.பெரியசாமி
அமைச்சர் ஐ.பெரியசாமி
Updated on
1 min read

பெரியாறு அணையைப் பார்வையிட 2 நாட்களில் நீர்ப் பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் வரவுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெரியாறு அணை உரிமையை தமிழக அரசு விட்டுத் தரவில்லை. இது பற்றி நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.

பெரியாறு அணையை பார்வையிட அமைச்சர் துரைமுருகன் 2 நாட்களில் வரவுள்ளார். அவருடன் சேர்ந்து நானும் செல்கிறேன்.

கூட்டுறவு நகைக் கடன்களில் முறைகேடு செய்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கான பயிர்க் கடன் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. கொடைக்கானலில் கூட்டுறவுச் சங்கங்கள் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ளும் வகையில், கூட்டுறவு பயிற்சிக் கல்லூரி அமைய உள்ளது. இதற்கு முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த ஆண்டே மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in