

தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லறை திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களின் கல்லறையில் நேற்று சிறப்பு வழிபாடு செய்தனர்.
கல்லறைத்திருநாளை முன்னிட்டு தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள சூசையப்பர் கல்லறைத் தோட்டம், வியாகுலமாத கல்லறைத் தோட்டம், திருஇருதய ஆண்டவர் கல்லறைத் தோட்டம், மிஷின் தெருவில் உள்ள சிஎஸ்ஐ கல்லறைத் தோட்டத்தில் நேற்று கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களின் கல்லறையை மலர்களால் அலங்கரித்து, இனிப்பு, பழங்களை வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி, சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
கும்பகோணம் காமராஜர் சாலையில் உள்ள தூய அலங்காரஅன்னை பேராலய கல்லறைத் தோட்டம், செம்போடை கல்லறைத் தோட்டம், ஊசி மாதா தேவாலய கல்லறைத் தோட்டம், பெருமாண்டி கல்லறைத் தோட்டம், கருப்பூர் கல்லறைத் தோட்டம் ஆகிய இடங்களிலும் கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
இதேபோல, பட்டுக்கோட்டை, பூண்டி மாதாகோவில் உள்ளிட்ட இடங்களிலும் நேற்று கிறிஸ்தவர்கள் கல்லறைத் திருநாள் வழிபாடு நடத்தினர்.
அரியலூர் மாவட்டத்தில்...
இதேபோல, குலமாணிக்கம், புதுக்கோட்டை, ஏலாக்குறிச்சி, ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லறைத் தோட்டங்களிலும் கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்டத்தில்...