வாக்காளர் : பெயர் சேர்க்க : சிறப்பு முகாம் :

வாக்காளர் : பெயர் சேர்க்க : சிறப்பு முகாம் :
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தப் பணிகளுக்காக நவம்பர் மாதத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என ஆட்சியர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்-2022 பணிகள்மேற்கொள்ளப்பட உள்ளன. இதை முன்னிட்டு நவம்பர் 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து, 1-1-2022 நாளை தகுதியாகக் கொண்டு 18 வயது பூர்த்தியடைந்த நபர்களை புதிய வாக்காளர்களாக சேர்க்கும் பணி தொடங்க உள்ளது. வரும் நவம்பர் 13 மற்றும் 14-ம் தேதி களில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இதன் தொடர்ச்சியாக, நவம்பர் 27 மற்றும் 28-ம் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

இதில், பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்’’ என தெரிவித் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in