சங்கராபுரம் பட்டாசு கடை விபத்து : பாஜக பிரமுகரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் :

சங்கராபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்.
சங்கராபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்.
Updated on
1 min read

சங்கராபுரத்தில் கடந்த 26-ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு நீதி கேட்டும், விபத்துக்கு காரணமான பட்டாசு கடை உரிமையாளரும், பாஜக மாவட்ட வர்த்தக அணித் தலைவருமான செல்வகணபதியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சங்கராபுரம் வட்டக் குழு சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வட்டத் தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாவட்ட துணை செயலாளர்கள் சிவக்குமார், உத்திரகோட்டி, வட்ட செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இப்போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in