குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 பேர் கைது :

குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 பேர் கைது :
Updated on
1 min read

மதுரை மாவட்டம், புதுதாமரைப் பட்டியைச் சேர்ந்தவர் முகமது அப்துல் ரகுமான் (21). இவர் மீது இருசக்கர வாகனத் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

மதுரை கென்னட் பிரதான சாலை பிஎஸ்என்எல் டவர் பகுதியைச் சேர்ந்தவர் ரிஷ்வான் (22). இவர் மீது கொலை உள் ளிட்ட வழக்குகள் உள்ளன.

மதுரை எல்லீஸ்நகர் காந்திஜி காலனி 3-வது தெருவைச் சேர்ந்தவர் குருமூர்த்தி என்ற குரு(19). இவர் மீதும் கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா உத்தரவிட்டார்.

இதன்பேரில் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in