பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூ. சைக்கிள் பேரணி :

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய சைக்கிள் பேரணி.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய சைக்கிள் பேரணி.
Updated on
1 min read

பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்து வரும்சூழலில் அத்தியாவசியப் பொருட்க ளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனவே பெட்ரோலியப் பொருட்களின் விலையை கட்டுப் படுத்த வலியுறுத்தி இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாநிலம் தழுவிய சைக்கிள் பேரணி போராட்டம் நடை பெற்றது. அதன் ஒரு பகுதியாக திருக்கோவிலூர் நகராட்சி பேருந்துநிலையம் அருகில் தொடங்கிய சைக்கிள் பேரணிக்கு நகர செயலாளர் பி.எச்.கே.பஷீர் அகமது தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழுஉறுப்பினர்கள் ஆர்.அருண்குமார்,

ஏ.விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தனர், கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன் கலந்துகொண்டு பெட்ரோலிய பொருட்களின் விலைஉயர்வை கண்டித்து உரையாற் றினார்.

மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ஆ.வளர்மதி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.எச்.கிப்ஸ் ரஹ்மான், இளைஞர் பெருமன்ற நிர்வாகி கே.ராஜதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் சைக்கிள் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பிரச்சாரம் மேற்கொண்டு ஐந்து முனை சாலைசந்திப்பு காந்தி சிலை அருகில் நிறைவுபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in