மாணவருக்கு பாட்டில் குத்து :

மாணவருக்கு பாட்டில் குத்து  :
Updated on
1 min read

மதுரை மாவட்டம் அலங்கா நல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவர்கள் இருவரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாணவர் ஒருவரை சக மாணவர் பாட்டிலால் குத்தினார். இதில் காயமடைந்த மாணவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர் மீது அலங்காநல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in