புத்தாடைக்கு பணம் தராததால் பெண் தற்கொலை :

புத்தாடைக்கு பணம் தராததால் பெண் தற்கொலை :
Updated on
1 min read

திருச்சுழி அருகே உள்ள தமிழ்பாடி மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் மதுரைவீரன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி நேவி(48). தீபாவளிக்காக குழந் தைகளுக்கு புத்தாடைகள் வாங்க கணவரிடம் பணம் கேட்டார். அதற்கு அவர், 2 நாளில் பணம் தருவதாகக் கூறியுள்ளார்.ஆனால், மதுரைவீரனிடம் நேவி மீண்டும் மீண்டும் பணம் கேட்டுள்ளார். இனியும் பணம் கேட்டால் தான் சாவதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என அவர் கூறியுள்ளார். அப்போது, உனக்கு முன் நான் இறந்துவிடுவேன் எனக்கூறி தோட்டத்துக்குச் சென்று பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து நேவி தற்கொலை செய்து கொண்டார். திருச்சுழி போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in