எளிமையின் சின்னமாக வாழ்ந்த - மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் காலமானார் :

எளிமையின் சின்னமாக வாழ்ந்த  -  மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் காலமானார் :
Updated on
1 min read

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்எல்ஏவுமான என்.நன்மாறன் நேற்று காலமானார். அவருக்கு வயது 74.

மதுரை பெத்தானியாபுரம் பாஸ்டின் நகரில் வசித்து வந்த நன்மாறனுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையின்போது மாரடைப்பு ஏற்பட்டதால் உடல்நிலை மோசமடைந்தது. இதைத்தொடர்ந்து சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 4 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு சண்முகவள்ளி என்ற மனைவியும், குணசேகரன், ராஜசேகரன் ஆகிய மகன்களும் உள்ளனர்.

நன்மாறனின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக மகபூப்பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் மதுரை மாநகர் மாவட்டக்குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிசடங்கு இன்று (அக்.29) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

நன்மாறன் 1947 மே 13-ல் மதுரையில் வே.நடராஜன் - குஞ்சரத்தம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். மதுரை அழகரடியில் உள்ள ஆறுமுகம் பிள்ளை பள்ளியில் பள்ளிப் படிப்பையும், வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் எம்.ஏ. (தமிழ்) பட்டம் பெற்றார்.

நன்மாறனின் தந்தை பஞ்சாலை தொழிலாளி, கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். தந்தையை பின்பற்றி மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்ந்த நன்மாறன், தனியார் பேருந்து நடத்துநர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர கட்சி ஊழியராக பணியாற்றினார். 1971 முதல் கட்சி மேடைகளில் பேச ஆரம்பித்தார்.

இலக்கியப் பணி

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைத் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். மார்க்சிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர், மதுரை மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர், மாவட்டக்குழு உறுப்பினர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார். தமிழகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உருவாக்கப்பட்டபோது அதன் முதல் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆகிய அமைப்புகளின் தலைவராக இருந்துள்ளார்.

2 முறை எம்எல்ஏ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in