தீபாவளிப் பண்டிகையையொட்டி மஞ்சள் சந்தைக்கு 3 நாள் விடுமுறை :

தீபாவளிப் பண்டிகையையொட்டி மஞ்சள் சந்தைக்கு 3 நாள் விடுமுறை  :
Updated on
1 min read

தீபாவளிப் பண்டிகையையொட்டி ஈரோடு மஞ்சள் சந்தைக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி ஆகிய நான்கு இடங்களில் மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது. வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது. தீபாவளிப் பண்டிகை நவம்பர் 4-ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், மஞ்சள் சந்தைக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நவம்பர் 3-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதி வரை மஞ்சள் சந்தைகள் இயங்காது. இதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை என்பதால், நவம்பர் 8-ம் தேதி மஞ்சள் சந்தை வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in