திண்டிவனம் அருகே - மது கடத்திய இளைஞர் கைது: மினிலாரி பறிமுதல் :

மதுபாட்டில்கள் கடத்தப்பட்ட மினிலாரி .
மதுபாட்டில்கள் கடத்தப்பட்ட மினிலாரி .
Updated on
1 min read

திண்டிவனம் அருகே மது கடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

திண்டிவனம் அருகே கிளியனூர் மதுவிலக்கு சோதனைச் சாவடியில் நேற்று அதிகாலை தலைமை காவலர் பதி தலை மையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் நோக்கி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை மேற் கொண்டனர். சோதனையில், 3,024 மதுபாட்டில்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து மினிலாரியை ஓட்டிவந்த புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (26) என்பவரை கைது செய்தனர். மேலும் கடத்தப் பட்ட மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரியை பறிமுதல் செய்த னர். மேலும் இது குறித்து கோட் டக்குப்பம் மதுவிலக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சோதனையில், 3,024 மதுபாட்டில்கள் கடத்தப் படுவது தெரியவந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in