மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது :

மது விற்பனையில் ஈடுபட்ட  2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கனகமுட்லு அடுத்த தண்ணீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த, வெள்ளையன் (எ) லோகநாதன் (24), ஓசூர், மத்திகிரி சிப்பாய்பாளையம் எல்லப்பா (38) ஆகிய இருவரும் சட்ட விரோதமாக தொடர்ந்து மதுவிற்பனையில் ஈடுபட்டு வந்ததால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி பரிந்துரையின் பேரில் அவர்கள் 2 பேரையும், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in