விழுப்புரம் அருகே பெண்ணிடம் பணம் பறிப்பு :

விழுப்புரம் அருகே பெண்ணிடம் பணம் பறிப்பு :
Updated on
1 min read

விழுப்புரம் அருகே சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் மனைவி விஜயலட்சுமி. மகளிர் சுய உதவிக்குழு தலைவியான இவர்நேற்று பிற்பகல் சுய உதவிக்குழுக்கு சொந்தமான ரூ. 40 ஆயிரம் பணத்தை தன் மகள் சங்கீதாவிடம் கொடுத்து வங்கியில் செலுத்துமாறு கொடுத்து அனுப்பினார். சங்கீதா தன் தோழியான கோகிலவர்த்தினி (22) யுடன் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள வங்கிக்கு சென்றார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் சங்கீதாவிடம் பணப் பையை பறித்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப்ப திவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in