கூட்டுறவு சங்கத்தில் பயிர்க்கடன் வழங்க தாமதம் :

திட்டக்குடி அருகே உள்ள சிறுமுளை கூட்டுறவு வங்கியில் பயிர்க்கடன் விண்ணப்பித்து கிடைக்காத விவசாயிகள் கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு திரண்டனர்.
திட்டக்குடி அருகே உள்ள சிறுமுளை கூட்டுறவு வங்கியில் பயிர்க்கடன் விண்ணப்பித்து கிடைக்காத விவசாயிகள் கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு திரண்டனர்.
Updated on
1 min read

திட்டக்குடி அருகே உள்ள சிறுமுளை கூட்டுறவு வங்கியில் பயிர்க்கடன் கேட்டு 95 விவசாயிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு பயிர்க் கடன் விண்ணப்பித்து கிடைக்க காலதாமதம் ஆகி வந்தது. இதனால் விவசாயிகள் அதிருப்தியில் இருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று பயிர்க் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்த விவசாயிகள் கூட்டுறவு சங்க அலுவலகம் முன் திரண்டனர்.

இது குறித்து தகவலறிந்த திட்டக்குடி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விண்ணப்பித்து இரண்டு மாதங்கள் ஆகியும் பயிர்க்கடன் கிடைக்கவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர். அதற்கு கூட்டுறவு சங்க ஊழியர்கள் நேற்று முன்தினமே பணம் வந்துவிட்டதாகவும் நாளை (இன்று) விவசாயிகள் கணக்கிற்கு சென்று விடும் என்றும் உறுதியளித்தனர். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in