நெற்குப்பை அருகே வாகனம் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு :

நெற்குப்பை அருகே    வாகனம் கவிழ்ந்து  ஒருவர் உயிரிழப்பு  :
Updated on
1 min read

சிங்கம்புணரியைச் சேர்ந்த 5 பேர் நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் தேங் காய் ஏற்றிக் கொண்டு சரக்கு வாகனத்தில் காங்கயம் புறப்பட்டனர். சிவகங்கை மாவட்டம், தெக்கூரை அடுத்த அய்யனார் கோயில் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க சரக்கு வாகனத்தை ஓட்டுநர் வளைத்தார்.

அப்போது வாகனம் கவிழ்ந் தது. இதில் சிங்கம்புணரி முரு கன்(50) இறந்தார். அழகுராஜா உட்பட 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர்.நெற்குப்பை போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in