ஆசிரியையை கடத்திய இளைஞருக்கு சிறை : நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

ஆசிரியையை கடத்திய இளைஞருக்கு சிறை :  நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

தனியார் பள்ளி ஆசிரியையை திருமணம் செய்ய வற்புறுத்தி காரில் கடத்திச் சென்ற இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருச்செங்கோடு அருகே ஆத்தூராம்பாளையம் அவரைக்காட்டைச் சேர்ந்தவர் தனியார் பள்ளி ஆசிரியை சுதா (24). இவரை திருச்செங்கோடு சன்னியாசிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த உறவினரான விவசாயி சீனிவாசன் (29) என்பவர் தன்னை திருமணம் செய்யக்கோரி வற்புறுத்தி வந்துள்ளார். மேலும், கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி சுதாவை, சீனிவாசன் காரில் கடத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திருச்செங்கோடு ஊரக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர். இந்த வழக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்படி, ஆசிரியை சுதாவை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி கடத்திய சீனிவாசனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.16 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in