இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் :

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்  :
Updated on
1 min read

கோயில் நகைகளை உருக்க நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசையும், அறநிலையத் துறை யையும் கண்டித்து தென்காசி மாவட்டம், சுரண்டையில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்டத் தலைவர் ஆறுமுகச்சாமி தலைமை வகித்தார். இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் சிறப்புரையாற்றினார்.

கோயிலுக்குச் சொந்தமான நகைகள், பக்தர்கள் காணிக்கையாக அளித்த நகைகளை உருக்கி, தங்கக் கட்டிகளாக்கி வங்கிகளில் டெபாசிட் செய்யப்போவதாக அறிவித்த தமிழக அரசின் முடிவை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர். இதேபோல், திருநெல்வேலி டவுன் வாகையடிமுனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில இணை அமைப்பாளர் பொன்னையா தலைமை வகித்தார். ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in