நெல் கொள்முதல் நிலைய பணிக்கு விண்ணப்பிக்க குவிந்த பட்டதாரிகள் :

நெல் கொள்முதல் நிலைய பணிக்கு விண்ணப்பிக்க குவிந்த பட்டதாரிகள் :
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 72 பட்டியல் எழுத்தர், 67 உதவுபவர், 296 இரவு காவலர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் திருவாரூர் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தில் நேற்று முதல் பெறப்படுகின்றன. இந்த விண்ணப்பங்கள் நவ.5-ம் தேதி வரை பெறப்படும்.

இதில், எழுத்தர் பணிக்கு இளங்கலை அறிவியல் பாடப் பிரிவு ஒன்றில் பட்டம், உதவுபவர் பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சி, இரவு காவலர் பணியிடத்துக்கு 8-ம் வகுப்பு ஆகியவை கல்வித் தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தப் பணிகளுக்காக பிஇ, பி.எட், ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் உட்பட ஏராளமான பட்டதாரிகள் நேற்று திரண்டு வந்து விண்ணப்பங்களை அளித்தனர். இதில் தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு பருவக் காலங்களில் மட்டுமே பணி வழங்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in